ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

author img

By

Published : May 18, 2021, 9:46 AM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM
9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

1. உலக சுகாதார அமைப்பின் தரவிலிருந்து மாறுபடும் உத்தரப் பிரதேசம் - ஈடிவி பாரத்தின் கள அறிக்கை

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தின் கோவிட் சோதனை தரவு அறிக்கையும், உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் வேறுபடுகிறது.

2. பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கையை கொடுக்கும் தன்னார்வலர்கள்!

கரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு ஒன்று சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை சைக்கிளில் சென்று வழங்கி வருகிறது.

3. கரோனா நிவாரணம் வழங்கிய சிறுமி

விருதுநகர்: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சிறுமி ரூ.2 ஆயிரம் பணத்தை வழங்கினார்.

4. 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவு பெறும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்!

கடலூர்: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

5. மதுரையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - நோயாளிகள் கடும் அவதி

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

6. மாநில கல்வி உரிமையை மீட்டெடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு!

மாநில உரிமை காக்க, கல்வி உரிமை மீட்க தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வாழ்த்தி வரவேற்கிறோம் என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

7. சொந்த ஊர் வந்த துளசி வாண்டையார் உடல்: பொதுமக்கள் அஞ்சலி!

தஞ்சாவூர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி காவலருமான பூண்டி துளசி வாண்டையார் உயிரிழந்த நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

8. ‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்’- ஆட்சியரை வலியுறுத்திய ஜி.கே.மணி!

தர்மபுரி: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.

9. பழங்குடி மக்களின் தத்ரூபமான சிலைகள்: அசந்துபோகும் சுற்றுலாப் பயணிகள்!

கர்நாடக மாநிலம் கார்வார் நகரத்திற்கு அருகே பழங்குடி மக்களை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்ட எழில் கொஞ்சும் கிராமம், 4 கோடி ரூபாய் செலவில், நான்கு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டது.

10. ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: 5 பேர் கைது!

காஞ்சிபுரம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கேஎம்சி மருத்துவமனை தற்காலிக ஊழியர் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.