ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,957 பேருக்குக் கரோனா

author img

By

Published : Aug 2, 2021, 8:52 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,957 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

today tamilnadu covid update  covid update  tamilnadu covid update  corona virus  corona attack  கரோனா பாதிப்பு  கரோனா தொற்று  கரோனா பரவல்  தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை  குணமடைந்தோர் எண்ணிக்கை  சிகிச்சை பெற்று வருவோர் விவரம்
கரோனா பாதிப்பு

சென்னை: கரோனா பாதிப்பின் இன்றைய (ஆகஸ்ட் 2) நிலவரத்தின் புள்ளி விவரத் தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

புதிய பாதிப்பு

அதில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1 லட்சத்து 44ஆயிரத்து 632 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 1,952 நபர்களுக்கும், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 2 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்த 2 நபர்களுக்கும், பிகாரில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 1,957 நபர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சைப் பெற்று வருவோர்

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 68 லட்சத்து 75ஆயிரத்து 435 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 25 லட்சத்து 63ஆயிரத்து 544பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் சுமார் 20ஆயிரத்து 385 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோர் எண்ணிக்கை

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், மேலும் குணமடைந்த 2,068 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 9ஆயிரத்து 29 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 23 நோயாளிகளும் என மேலும் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 130 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை5,38,521
கோயம்புத்தூர்2,29,804
செங்கல்பட்டு1,62,215
திருவள்ளூர்1,13,622
சேலம்93,562
திருப்பூர்87,985
ஈரோடு 94,042
மதுரை 73,540
காஞ்சிபுரம் 71,797
திருச்சிராப்பள்ளி72,567
தஞ்சாவூர்68,102
கன்னியாகுமரி 60,158
கடலூர் 60,573
தூத்துக்குடி55,118
திருநெல்வேலி47,935
திருவண்ணாமலை52,140
வேலூர் 48,111
விருதுநகர் 45,525
தேனி42,952
விழுப்புரம்43,907
நாமக்கல்47,315
ராணிப்பேட்டை41,998
கிருஷ்ணகிரி41,424
திருவாரூர் 37,921
திண்டுக்கல்32,222
புதுக்கோட்டை28,180
திருப்பத்தூர் 28,289
தென்காசி26,868
நீலகிரி 30,617
கள்ளக்குறிச்சி29,160
தருமபுரி 26,165
கரூர்22,669
மயிலாடுதுறை21,088
ராமநாதபுரம்20,052
நாகப்பட்டினம்18,729
சிவகங்கை 18,836
அரியலூர் 15,817
பெரம்பலூர் 11,497

போக்குவரத்து மூலம் பாதிப்பு

கரோனாவால் சர்வதேச விமானத்தில் வந்த 1,015 பயணிகளும், உள்நாட்டு விமானத்தில் வந்த 1,078 பயணிகளும், ரயில் மூலம் வந்த 428 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 40 ஆயிரம் பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.