ETV Bharat / state

புயல் எச்சரிக்கை: தயார் நிலையில் பேரிடர் குழுக்கள்! மழை பாதிப்பு எச்சரிக்கையுள்ள 8 மாவட்டங்களுக்கு விரைவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 6:23 PM IST

வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலக மாற உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். பல்வேறு துறைகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.
கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் விரைந்த மீட்பு பணி குழுக்கள்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் விரைந்த மீட்பு பணி குழுக்கள்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதையடுத்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவத்துள்ளது. மேலும் நிர்வாகம் மற்றும் மீட்பு பணிகளுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கபட்டுள்ளது.

தயார் நிலையில் இருக்கும் மீட்பு பணிகள்: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "எந்தெந்தப் பகுதிகளில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்பகுதிகளுக்கு மீட்புக் படைகளை அனுப்பி வைத்திருக்கிறோம். புயலால் சேதம் அடையும் மரங்கள், மின்கம்பங்களை விரைந்து அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தயார் நிலைகளில் உள்ளன.

கனமழை  எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் விரைந்த மீட்பு பணி குழுக்கள்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் விரைந்த மீட்பு பணி குழுக்கள்

437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அமைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழைப்பாதிப்பு அதிகாமக இருக்க வாய்ப்பிருப்பதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மொத்தம் 435 பேர் தயார் நிலையில் உள்ளன" எனத் தெரிவித்தனர்.

ஆயத்தமான தமிழ்நாடு பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 17 சிறப்பு குழுக்கள்: தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சார்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அவரவர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.

மாநகர காவல் துறை சார்பில் முதல்முறையாக அறிமுகம் கண்ட 'மெடிக்கல் ரெஸ்பான்ஸ் குழு': மாநகர காவல் துறை சார்பில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பை எதிர்கொள்ள சென்னை மாநகர காவல் துறையின் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளன. மேலும், 12 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளன. ஒரு குழுவிற்கு 10 வீரர்கள் என 120 வீரர்கள் அந்தெந்த காவல் மாவட்டத்தில் லைஃப் ஜாக்கெட், லைஃப் போட், மரம் அறுக்கும் கருவி, நீர் உறிஞ்சி பம்புகள் போன்றவைகளும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. மேலும், 18 ஆயிரம் போலீசார்களும், 3 ஆயிரம் போக்குவரத்து போலீசார்களும் போக்குவரத்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இம்முறை முதல் முறையாக மெடிக்கல் ரெஸ்பான்ஸ் குழு ஒன்றை அமைக்கபட்டிருக்கிறது. மாநகராட்சி உள்ளிட்ட பல துறைகளுடன் இனைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல பிரத்யேகமாக வழித்தடங்கள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் எங்கெங்கு தண்ணீர் தேங்கும் மற்றும் மழையை கண்காணிக்க மாநகராட்சியுடன் இணைந்து கண்ண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகின்றன என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது.

ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறு வானிலை மையம் எச்சரிக்கை: நாளை(டிச.3) காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 03.12.2023 மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, 04.12.2023 மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும் என்பதனால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் வெள்ளிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு கருதி படகுகளை ராட்சத க்ரேன் மூலம் கரையில் பத்திரமாக வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் களமிறங்கும் பணியாளர்கள்: மாநகராட்சி சார்பில் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் ஆர்.பிரியா கூறுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. மண்டலம் வாரியாக முன்னெசரிக்கை நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையை எதிர்கொள்ள பகல் நேரத்தில் 23ஆயிரம் பணியாளர்களும், இரவு நேரத்தில் 16ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 39ஆயிரம் பணியாளர் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் தற்போது 162 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன" என தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சென்னையில் மீட்பு பணியில் ஈடுபவதற்காக தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அடையாரில் 31 வீரர்கள் முகாம் அமைத்து உள்ளனர். இயற்கை பேரிடர் நடைபெற வாய்ப்பிருந்தால், அவர்கள் களத்தில் இறங்குவார்கள். இதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு புயலின் தாக்கம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் மாநகரட்சி அதிகாரிகளை கூடுதலாக மண்டலம் ரிதியாக கண்காணித்து வருகின்றனர். சுகாதாரக் குழு சார்பில் தண்ணீர் வெளியேறிய இடத்தில் பிளீச்சிங்க் பவுடர்கள் மற்றும் கிருமி நாசினிகளை தெளிக்க அறிவுறுத்தி இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பிலான எச்சரிக்கைகள்: "பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று(டிச.2) 100 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழைக்காக தொடர்ந்து 10 வாரங்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று(டிச.2) 6வது வாரமாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5 வாரங்களில் இதுவரை 10ஆயிரத்து 576 முகாம்கள் நடைபெற்றது. அதில் 5லட்சத்து 21ஆயிரத்து 853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். டிசம்பர் மாதம் 30ந்தேதி வரை 4 வாரங்கள் இந்த முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது" என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ சார்பில் முன்னெடுக்கப்படும் முன்னெச்சரிக்கைகள்: அதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறுகையில், "மழைக்காலத்தில் ஏற்படும் எந்தச் சூழலையும் சமாளிக்க பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மெட்ரோ நிர்வாகமும் இணைந்து செயல்படுகிறது. மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன்களைக் கொண்ட 350 நீர் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

உயர்மட்ட பாதையில் இருந்து சுரங்கப்பாதைக்கு செல்லும் வழியில் மழைநீர் சுரங்கப்பாதைக்கு செல்லாத வகையிலும், அப்பகுதிக்கு யாரும் மழைநீரை திருப்பிவிடாமல் இருப்பதை கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளில் 200-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், மழைநீர் மெட்ரோ இரயில் நிலையங்களுக்குள் வராத வகையில் போதுமான அளவிற்கு மண் மூட்டைகளும், நீர் வெளியேற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இப்பணிகள் அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிக்க பணியாளர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் பணியை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி இருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த 2 நாட்களுக்கு இந்த 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.