ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 9:56 PM IST

TN Govt: சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் 1க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 01.06.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்றும், ஒரே பணி - ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதை களையக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311-இல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என கோரிக்கையை இடம் பெறச் செய்தார்கள்.

புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் இந்த 2023 புத்தாண்டில் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணி நியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். ஊதிய முரண்பாடை விரைந்து களையக் கோரி, மூன்று போராட்டங்களை நடத்திட தீர்மானித்தோம்.

அதன்படி, முதல் கட்டமாக ஆகஸ்ட் 13 அன்று கோரிக்கை ஆயத்த மாநாடு சுமார் 6,500 ஆசிரியர்களுக்கு மேல் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 5 முதல் 27 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் சென்று வருகிறோம். அரசு செவிமடுக்கவில்லை என்பதனால் வருகிற 28ஆம் தேதி முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துவது என்றும், கோரிக்கை முடியும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் நாளை (செப். 25) காலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குநர் கலந்து கொள்ள பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வரக் கூடாது” - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.