ETV Bharat / state

சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம்: அழைப்பிதழ் கொடுக்க டெல்லி விரைந்த சபாநாயகர்

author img

By

Published : Jul 30, 2021, 6:39 PM IST

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட இருப்பதால், குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்க சபாநாயகர் அப்பாவு இன்று டெல்லி சென்றார்.

TN assembly speaker Appavu going to Delhi
டெல்லி விரைந்த சபாநாயகர்

சென்னை: 1969ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவரது உருவப்படத்தை சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை திறக்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி, கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக சில நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று, குடியரசுத் தலைவருக்கு அழைப்பு கொடுத்திருந்தார்.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்க டெல்லி புறப்பட்டார். அங்கு அழைப்பிதழ் கொடுத்த பிறகு, நாளை (ஜூலை31) மாலை 4 மணிக்கு விமானத்தில் அப்பாவு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.

இதையும் படிங்க: கமலாலயத்தில் அறிவாலய கதிர்கள்: வரவேற்ற அண்ணாமலைக்கு அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.