ETV Bharat / state

ஆட்டுக் குட்டி இறந்த சண்டை தற்கொலையில் முடிந்தது

author img

By

Published : Mar 18, 2019, 10:07 PM IST

சென்னை: ஆவடி அருகே ஆட்டுக்குட்டி இறந்த சம்பவத்தில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட வீடு

ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி சங்கீதா(24). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும், அவரது மாமியார் அமிர்தத்திற்கும் இடையே அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்படுவது வழக்கம். இதையடுத்து இன்று காலையில் வீட்டில் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று முள் வேலியில் சிக்கி இறந்து விட்டது.

இதனை சரிவர பார்த்துக் கொள்ளாத முடியாதா எனக் கூறி சங்கீதாவுடன் அமிர்தம் வாய் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:ஆவடி அருகே ஆட்டுக்குட்டி ஒன்று இறந்ததில் மாமியாருடன் தகராறு ஏற்பட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Body:ஆவடி அடுத்த கொள்ளுமேடு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் தனசேகர் இவர் கால் டாக்ஸி டிரைவர். இவரது மனைவி சங்கீதா(24) இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இதற்கிடையில் சங்கீதாவிற்கும் மாமியார் அமுர்தத்திற்கும் இடையே அடிக்கடி சிறு சண்டைகள் குடும்பத்தில் ஏற்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று வீட்டில் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று முள் வேலியில் சிக்கி இறந்து விட்டது. இதனை சரிவர பார்த்துக் கொள்ளாத முடியாதா எனக் கூறி சங்கீதாவுடன் அமிர்தம் வாய் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion:மேலும் புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.