ETV Bharat / state

கோவையில் கார் வெடித்த சம்பவம் எதிரொலி - சென்னை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு!

author img

By

Published : Oct 23, 2022, 8:42 PM IST

கோவையில் கார் வெடித்த சம்பவம் எதிரொலியாக, சென்னை விமானநிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து, சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுகின்றனா்.

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலி!!!
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் எதிரொலி!!!

சென்னை: கோவையில் காரில் எடுத்து வந்த 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறியதில், காரில் வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தாா். மேலும் அவா் எதற்காக 2 சிலிண்டா்களை காரில் எடுத்துச்சென்றாா் என்றும் தெரியவில்லை. இது பற்றி போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, கோவைக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

இந்த வெடி விபத்தில், வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? பின்னணியில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனா். மேலும் தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

இந்தநிலையில் இன்று(அக்.23) சென்னை விமானநிலையத்தின் பாதுகாப்பு 3 அடுக்கிலிருந்து 5 அடுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து, சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுகின்றனா். மேலும் கூடுதலாக வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு, பயணிகளின் உடமைகள், காா் பாா்க்கிங் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்பட்டு, விடுமுறையில் இருப்பவர்களையும் பணிக்கு அழைத்துள்ளனா். உயா் அலுவலர்களிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த சோதனைகளும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடரும் என்று சென்னை விமானநிலைய பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகின்றனா்.
இதையடுத்து ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:ஆன்லைனில் விஷம் வாங்கிக்குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.