ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,325 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Feb 15, 2022, 10:42 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,325 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று பிப்ரவரி 15ஆம் தேதி கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரத் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84 ஆயிரத்து நான்கு நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,325 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஆறு கோடியே 23 லட்சத்து 15 ஆயிரத்து 867 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 39 ஆயிரத்து 221 நபர்கள் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 31 ஆயிரத்து 368 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இன்று ஒரே நாளில் ஐந்தாயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 69 ஆயிரத்து 907 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஏழு பேர், அரசு மருத்துவமனையில் ஏழு பேர் என 14 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

அதிக பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்கள்

சென்னை - 303

கோயம்புத்தூர் - 231

செங்கல்பட்டு - 113

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்பவர்களில் 1.7 விழுக்காடு பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 0.2 விழுக்காடு நபர்களுக்கும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களில் 0.3 விழுக்காடு என மிகக் குறைந்த அளவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் விதிமீறல்: ரூ.9 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.