ETV Bharat / state

அடுத்த 2 நாட்கள் ஜாக்கிரதை.. வெப்பநிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Apr 12, 2023, 3:50 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்கள் ஜாக்கிரதை.. வெப்பநிலை குறித்து அதிர்ச்சி தகவல்!
அடுத்த 2 நாட்கள் ஜாக்கிரதை.. வெப்பநிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 12) முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சம்மரில் சருமம், தலைமுடியை பராமரிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.