ETV Bharat / state

சென்னையில் 200 இடங்களில் வரும் 5ஆம் தேதி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்!

author img

By

Published : Nov 3, 2022, 5:04 PM IST

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் வரும் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

சென்னையில் 200 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்
சென்னையில் 200 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நவம்பர் 5ஆம் தேதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

விருகம்பாக்கம் சட்டமன்றத்தொகுதி கலைஞர் நகரில் உள்ள ராணி அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.

மேலும், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் அனைத்து மருத்துவ முகாம்களையும் அதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.

சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள வட்டங்களில் தலா ஒன்று விதம் 200 இடங்களில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. வடகிழக்குப்பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்கால நோய்களான டெங்கு, ப்ளூ என்கின்ற இன்புளூயன்சா, காலரா, டைபாய்டு, சேற்றுப்புண் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நடத்தவுள்ளது.

இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு முதலிய மழைக்காலத்தொற்று நோய்களுக்குத்தேவையான தகுந்த சிகிச்சைகள் வழங்கப்படும். பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் வழங்கப்படும்.

இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல் மற்றும் இதர உபாதைகள் கண்டறியப்படுவர்கள் மேல் சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாததை முதலமைச்சர் ஒன்றரை ஆண்டுகளில் செய்துள்ளார் -அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.