ETV Bharat / state

பெருங்களத்தூரில் தொடர் கொள்ளை - மக்கள் பீதி

author img

By

Published : Apr 15, 2021, 3:50 PM IST

பெருங்களத்தூர் அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த 75 மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெருங்களத்தூரில் தொடர் கொள்ளை சம்பவம் - மக்கள் மீதி
பெருங்களத்தூரில் தொடர் கொள்ளை சம்பவம் - மக்கள் மீதி

சென்னை: பெருங்களத்தூா் அருகே காந்திநகரில் வசிப்பவர் சந்திரா(75). இவர் வழக்கம்போல இன்று (ஏப்ரல் 15) காலை மணியளவில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டியிருந்தார்.

அப்போது, கார் ஒன்று சந்திராவின் வீடு அருகே வந்து நின்றது. காரிலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்திராவை அழைத்து முகவரி கேட்டார். அப்போது, காரிலிருந்த மற்றொருவர் மின்னல் வேகத்தில் சந்திரா அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு, சந்திராவை கீழே பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம், குறித்து அருகில் உள்ள பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதேபோல, கடந்த வெள்ளிக்கிழமை காலை பல்லாவரத்தில் 8 மாத கா்ப்பிணி பெண்ணை சாலையில் ரதரதவென்று இழுத்து சென்று செயின் பறிக்க வந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.