ETV Bharat / state

'தயார் நிலையில் பள்ளிகள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By

Published : Aug 11, 2021, 1:31 PM IST

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருப்பதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்புவரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், "செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை தயாராகிவருகிறது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - தீவிர ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.