ETV Bharat / state

பூந்தமல்லியில் தந்தை கண் முன்னே மகள் லாரி மோதி உயிரிழப்பு

author img

By

Published : Aug 7, 2020, 8:04 PM IST

சென்னை: பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

poonamalle accident News
poonamalle accident News

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை நேரு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் பத்தாம் வகுப்பு பயின்று வரும் தனது மகள் அபிநயா (16), நான்கரை வயது மகன் கிருஷ்ணனோடு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அபிநயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த தந்தை தங்கராஜ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். நான்கரை வயது குழந்தை காயமின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து, லாரி ஓட்டுநர் ஏழுமலையை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை கண்முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பகுதியில் தொடரும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.