ETV Bharat / state

இருசக்கர வாகனங்களை திருடியவர்களுக்கு காவல் துறையினர் வலை

author img

By

Published : Oct 12, 2019, 2:53 PM IST

சென்னை: இருசக்கர வாகனம் திருடியவர்களை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடிவருகின்றனர்.

கொள்ளையர்கள்

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபால். இவர் நேற்று காலை அதேப் பகுதியில் உள்ள ஜெயின் துறவியை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையில் அந்தப் பகுதியிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 12.10.19

இருசக்கர வாகனம் திருட்டு, சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை..

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ஸ்ரீபால் இன்று நேற்று காலை 10.00 மணிக்கு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஜெயின் சாமியாரை தரிசிக்க உள்ளே சென்று விட்டு 10.30 மணிக்கு திரும்பவந்து பார்த்த போது தனது இரு சக்கர வாகனம் மாயமாகியிருந்தது. தனது வாகனம் காணவில்லை என வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களின் மூலம் ஆய்வு செய்து திருடப்பட்ட இரு சக்கர வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்..

tn_che_02_two_Wheelar_theft_police_enquiry_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.