ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Apr 12, 2021, 2:56 PM IST

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிவந்த 892 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு
முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னை காவல் துறையினர் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில் நேற்று (ஏப்.11) மட்டும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 892 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டாம் தேதி முதல் 2 ஆயிரத்து 351 பேர் மீது முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளிடம் விதிக்கப்பட்ட அபராதம்
வாகன ஓட்டிகளிடம் விதிக்கப்பட்ட அபராதம்

அதேபோல தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீதும் இதுவரை 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 59 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழனியில் கரோனா பாதிப்பு: இருவேறு பகுதிகளுக்குச் சீல்வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.