சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு வந்த கியூ பிரிவு காவல் துறையினர் ஆதிமூலம் மணி (45) என்ற பயணியை நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்பு அவரது பயணத்தை ரத்துசெய்து தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், ஆதிமூலம் மணி இலங்கையிலிருந்து வந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கினார். பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்பில் இருந்தார். இவருடன் குணசேகர் என்பவரும் தங்கினார் என்பது தெரியவந்தது.
இதனிடையே கியூ பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு குணசேகர் இன்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் டெல்லி சென்றார். தற்போது ஆதிமூலம் மணியை கைதுசெய்த காவல் துறையினர், டெல்லியில் குணசேகரை கைதுசெய்ய முடிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: வன்னியர் சங்கப் பேரணியில் வாகன கண்ணாடியை உடைத்தவர் கைது!