கரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் பேருந்தில் ஏறி செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டமாக கூடினர்.
![கோயம்பேட்டில் குவிந்த மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img_20210113_2339121610563034483-12_1401email_1610563046_51.jpg)
கடந்த இரு நாள்களாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பயணிகள் வருகை மிக குறைவாக இருந்த நிலையில் இன்று காலை முதல் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
![பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img_20210113_2338311610563034423-14_1401email_1610563046_499.jpg)
இரவு நேரத்தில் ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள நிலையில், போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
![கோயம்பேட்டில் மக்கள் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img_20210113_2338001610563034430-37_1401email_1610563046_625.jpg)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் நேற்று (13.01.2021) இரவு 10 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,050 பேருந்துகளில் 1,976 பேருந்துகளும், 1,280 சிறப்புப் பேருந்துகளும் நீக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
![கோயம்பேடு பேருந்து நிலையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img_20210113_2336071610563034438-44_1401email_1610563046_210.jpg)
கடந்த 11ஆம் தேதி முதல் இன்று இரவு வரை, 9,016 பேருந்துகளில் 4,35,683 பயணிகள் பயணித்துள்ளனர் என்றும், இதுவரை 1,22,500 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
![நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img_20210113_1713191610563034452-93_1401email_1610563046_8.jpg)