ETV Bharat / state

மழைநீருடன் கலந்த கழிவுநீர் - மக்கள் கடும் அவதி!

author img

By

Published : Dec 4, 2020, 3:09 PM IST

சென்னை:ஆதம்பாக்கம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Sewage stagnation with rainwater
Sewage stagnation with rainwater

புரெவி புயல் காரணமாக சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்றிரவு(டிச.4) முதல் பெய்து வரும் மழையால் ஆதம்பாக்கம் பெரியார் நகர் இரண்டாவது தெருவில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறாக ஓடுகிறது. இதேபோல் ஆறாவது தெருவில் மழைநீர், சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மழைநீருடன் கலந்த கழிவுநீர்

கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியிருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். தேங்கியிருக்கும் மழைநீரை அலுவலர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரஜினி குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை - கனிமொழி எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.