ETV Bharat / state

விபத்தில் தொழிலாளி பலி: 24 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு

author img

By

Published : Nov 4, 2020, 7:15 PM IST

சென்னை: சாலை விபத்தில் பலியான கட்டுமான தொழிலாளியின் குடும்பத்திற்கு 24 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டுமென பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்திற்கு சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

special court
special court

திருத்தணியைச் சேர்ந்த மணி என்ற கட்டுமான தொழிலாளி 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருத்தனி – திருப்பதி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனது கணவர் மரணத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி தேன்மொழி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுதா, கட்டடத் தொழிலாளி மணியின் மரணத்துக்கு, அதிவேகமாக கார் இயக்கப்பட்டதும், அஜாக்கிரதையுமே காரணம் என்பது நிருபணமாவதால், 24 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:வடபழனி அருகே கார் விபத்து: கல்லூரி மாணவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.