ETV Bharat / state

கூவம் ஆற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு!

author img

By

Published : Sep 28, 2020, 5:21 PM IST

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் ஒருவாரம் முன்பு காணாமல் போன மூதாட்டி கூவம் ஆற்றில் சடலமாக இன்று (செப்.28) மீட்கப்பட்டார்.

மூதாட்டி
மூதாட்டி

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலாஜி தெருவை சேர்ந்தவர் மூதாட்டி நாகம்மாள்(80). இவர் கடந்த வாரம் காணாமல் போனதாக உறவினர்கள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மூதாட்டியை தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று(செப்.28) சில நபர்கள் சிந்தாதிரிபேட்டை கூவம் ஆற்றில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடந்து விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் மூதாட்டி நாகம்மாள் என்று உறவினர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. மேலும் நாகம்மாள் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால், அவர் சில நாள்களுக்கு முன்பே கூவம் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இது கொலையா, தற்கொலையா அல்லது நாகம்மாளே தவறி விழுந்தாரா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்களுக்கு கத்தி குத்து: ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.