ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவரின் விரல் ரேகையை ஒப்பிட்டுப் பார்க்க சிபிசிஐடிக்கு உத்தரவு!

author img

By

Published : Nov 19, 2019, 5:22 PM IST

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவரின் விரல் ரேகையை, தேர்வெழுதிய போது எடுத்த விரல் ரேகையுடன் ஒப்பிட்டுப் பார்க்க சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவரின் விரல் ரேகையை ஒப்பொட்டு பார்க்க சிபிசிஐடிக்கு உத்தரவு!

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிகாந்த் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் என் மீதும் என் மகன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தபோது, அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகுமாறு உத்தரவிட்டனர்.

நான் ரசாயன கம்பெனி ஒன்றின் தலைவர் பொறுப்பிலிருக்கும் நிலையில், எனது மகன் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில்வதற்காகச் சேர்ந்தார். இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்து என்னையும் எனது மகனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரத்தில் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை.

மேலும், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தபோது அந்த புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது. இது தொடர்பாக அலுவலர்களை அணுகிய போது ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால், தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும், எனது மகன் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆகவே, இந்த வழக்கில் எனக்கும் எனது மகனுக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு அனுமதிச் சீட்டில் மாணவனின் புகைப்படம் மாறியுள்ளதாகக் கூறி நீட் தேர்வு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மாணவன் தரப்பில் கூறப்பட்டது.மேலும் மாணவனை நேரில் விசாரித்த நீதிபதி, நீங்கள் தான் நீட் தேர்வை எழுதினதா? என கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி காவல் துறைக்கு உத்தரவிட்டார். மேலும் அதுவரை மாணவன் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய தடை நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க...கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி!

Intro:நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் தற்போது மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..Body:நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் தற்போது மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..

சென்னை கோபாலபுரத்தில் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிக்காந்த் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்," நீட் தேர்வி.ல் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் என் மீதும் என் மகன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அணுகுமாறு உத்தரவிட்டனர்.
நான் ரசாயன கம்பெனி ஒன்றின் தலைவராக பொறுப்பிலிருக்கும் நிலையில், எனது மகன் தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயில்வதற்கான சேர்ந்தார். இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்து என்னையும் எனது மகனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரத்தில் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த போது அந்த புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது இது தொடர்பாக அதிகாரிகள் அணுகிய போது ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் எனது மகன் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆகவே, இந்த வழக்கில் எனக்கும் எனது மகனுக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார் ..

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு அனுமதி சீட்டில் மாணவனின் புகைப்படம் மாறியுள்ளதாக கூறி நீட் தேர்வு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மாணவன் தரப்பில் கூறப்பட்டது.மேலும் மாணவனை நேரில் விசாரித்த நீதிபதி,நீங்கள் தான் நீட் தேர்வை எழுதினதா என கேள்வி எழுப்பிய நீதிபதி.
மேலும் தற்போது மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டு. அதுவரை மாணவன் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய தடை நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.