ETV Bharat / state

முதல்வர் ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி எம்ஆர்பி செவிலியர்கள் நூதன போராட்டம்!

author img

By

Published : Jan 9, 2023, 2:06 PM IST

தங்களுக்கு நிரந்தர பணி வழங்கக்கோரி எம்ஆர்பி செவிலியர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுட்டனர்.

முதல்வருக்கு கடிதம்
முதல்வருக்கு கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவிலிருந்த போது, மக்களில் உயிர் காக்க, முன்னதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு எழுதி தகுதிப் பெற்றிருந்த 2300 செவிலியர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் கரோனா தொற்று பணிக்காகத் தேர்வுச் செய்யப்பட்ட செவிலியர்களை 2022 டிசம்பர் 31ம் தேதியுடன் பணியிலிருந்து விடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களைத் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் மூலம் மாவட்ட மருத்துவச் சேவையின் கீழ் மாதம் 18 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஆர்பி செவிலியர்கள், கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எம்ஆர்பி செவிலியர்கள் அஞ்சல் அட்டையில் முதல்வருக்கு கடிதம்
எம்ஆர்பி செவிலியர்கள் அஞ்சல் அட்டையில் முதல்வருக்கு கடிதம்

இந்நிலையில் தங்களுக்குப் பணி பாதுகாப்பு வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து அஞ்சல் அட்டை மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்திலிருந்து இந்த கடிதங்களை அனுப்பினர்.

இதையும் படிங்க: மருத்துவர் ஷர்மிகாவுக்கு வந்த புதிய சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.