ETV Bharat / state

சென்னையில் 5 மாதங்களில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்!

author img

By

Published : Oct 31, 2020, 11:03 PM IST

சென்னை: கடந்த 5 மாதங்களில் சென்னை முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

சென்னையில் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் கரோனா அதிகமாக பரவி வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உயர்ந்து வருகிறது.

இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாள்தோறும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மே எட்டாம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 66 ஆயிரத்து 97 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதில் 32,95,369 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 25விழுக்காட்டிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (அக்.,31) 361 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 49, தண்டையார்பேட்டையில் 42 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இன்று நடைபெற்ற 361 மருத்துவ முகாம்களில் மொத்தம் 17 ஆயிரத்து 174 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

அதில் 618 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி: ஒரே நாளில் 449 மருத்துவ முகாம்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.