ETV Bharat / state

பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவும் பணி: அமைச்சர் ஆய்வு!

author img

By

Published : Dec 9, 2022, 9:39 PM IST

பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் மற்றும் சிலை நிறுவும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி ஆய்வு மேற்கொண்டார்.

பேராசிரியர் அன்பழகனின் சிலை நிறுவும் பணி: அமைச்சர் ஆய்வு
பேராசிரியர் அன்பழகனின் சிலை நிறுவும் பணி: அமைச்சர் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ.7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.

மேலும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளகம் என்ற வளைவும், திருவுருவ சிலையும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளான வரும் 19 ந் தேதி பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்படும் திருவுருவ சிலையையும், அன்பழகன் கல்வி வாளாகப் பெயர்ப் பலகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மிக்கு 35-வது பலி; ஆளுநர் இனியும் தாமதிக்க வேண்டாம் - அன்புமணி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.