ETV Bharat / state

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக வழக்கு; கோவை பாஜக தலைவரின் முன்ஜாமீன் மனு தள்ளிவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 6:52 AM IST

Udhayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கோவை மாவட்ட பாஜக தலைவர் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கோவை மாவட்ட பாஜக தலைவராக உள்ள பாலாஜி உத்தம ராமசாமி, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி, அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி பாலாஜி உத்தம ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், “உதயநிதி ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடனோ, அவதூறாகவோ தான் பேசவில்லை என கூறியுள்ளார். மேலும், என்ன நடந்தது என்பதை காவல் துறை முறையாக விசாரிக்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து விளக்கம் தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு விளக்கமளிக்க காவல் துறைக்கு அவகாசம் அளித்து விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: “மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.