ETV Bharat / state

உதவுபவன் கையை என் அரசு தட்டிவிடுகிறது - கமல் ட்வீட்

author img

By

Published : Apr 13, 2020, 12:33 PM IST

ஏழைக்கு உதவுபவன் கைய அரசு தட்டிவிடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

kamal
kamal

கரோனா தொற்று அச்சம் கரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் உதவி செய்து வருகின்றனர்.

இந்த உதவிகளை தடை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும் ஊரடங்கு அமலில் இருக்கு தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

  • அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.This is no time for commision or omission.People are watching pic.twitter.com/wKegjobyKE

    — Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்டை மாநிலங்கள் சில COVID 19 உடன் போராடத் தனியார், இளைஞர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் என பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையை தட்டிவிடுகிறது. வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்கள்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டார்ச் லைட் பிரகாசமாக எரிய, நமது பிரதமர் தேவை' - கமல் டவீட் குறித்து எஸ்.வி.சேகர் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.