ETV Bharat / state

ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய அலுவலர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

author img

By

Published : Jul 20, 2021, 3:03 PM IST

நங்கநல்லூரில் ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய அலுவலர் வீட்டில் 45 பவுன் தங்க நகை, இரண்டு கிலோ வெள்ளி, 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய அலுவலர் வீட்டில் 45 பவுன் தங்க நகை கொள்ளை
ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய அலுவலர் வீட்டில் 45 பவுன் தங்க நகை கொள்ளை

சென்னை: நங்கநல்லூரில் ஐயப்பா நகர் பகுதியில் வசித்துவருபவர் ஸ்ரீதர் (61). இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று (ஜூலை 19) சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குப் பிறந்தநாள் விழாவிற்காகக் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். விழா முடித்துவிட்டு இன்று (ஜூலை 20) வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, 70 ஆயிரம் ரூபாய், ஒரு மடிக்கணினி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

காவல் துறையினர் விசாரணை

இது குறித்து பழவந்தாங்கல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: உதவி கேட்பதுபோல் ஓட்டுநரைத் தாக்கி கொள்ளை: 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.