ETV Bharat / state

"நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் - எனது தனிப்பட்ட முடிவல்ல" - நடிகர் விஷால்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:46 PM IST

Actor Vishal: நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நான் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவல்ல எனவும் அந்தக் கோரிக்கை கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கோடம்பாக்கம் புலியூர்புரம் பகுதியில் நடிகர் விஷாலின் ரசிகர் மன்றமான மக்கள் நல இயக்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையடுத்து நடிகர் விஷால் பெண்களுக்கு சேலைகளை வழங்கியதோடு அப்பகுதியில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், அப்பகுதி மக்கள் நடிகர் விஷாலுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகள். வழக்கமாக வீட்டில்தான் பொங்கல் கொண்டாடுவேன். தற்போது இப்பகுதியில் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள தாய்கள் என்னை செயற்கைத்தனம் இல்லாமல் மனதார வாழ்த்தினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த இடத்தை அரசியலுக்காக நான் பயன்படுத்தவில்லை. இருந்த போதிலும், இப்பகுதி மக்கள் ஒருவாரமாக தண்ணீர் வரவில்லை எனக் கூறுகின்றனர். அதனால் என்னால் முடிந்த அளவிற்கு தற்போது ஒரு மணி நேரத்தில் தண்ணீர் அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். அது எனது கடமையாக நினைக்கிறேன்.

கோயிலுக்கு வந்தேன், சென்றேன் என இருக்க கூடாது. இப்பகுதியில் உள்ள 100 வருட கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதையும் செய்ய வேண்டும். அனைவரும் முடிந்த அளவிற்கு சமுதாயத்திற்கு உதவ வேண்டும். இங்கு ஒருவர் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாக கேள்விப்பட்டேன். தமிழ்நாடு சார்பாக 100 பேராவது ஒலிம்பிக் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல எங்களின் விருப்பம்.

மறைந்த விஜயகாந்துக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்த உள்ளோம். அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அனைவரும் கண்டிப்பாக வருவார்கள். விஜயகாந்த் நடிகர் சங்கத்துக்காக என்ன செய்துள்ளார் என அனைவருக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது பொதுப் பணி. நாம் எது செய்தாலும் அது அரசியல்தான். இந்த இடத்தில் இன்று அரசியல் செய்வதாக நினைத்தால் கூட தப்பில்லை.

இந்த காலக்கட்டத்தில் நல்லது செய்வது கடினம். கேட்டது செய்வது சுலபம். அதுகுறித்து சிந்திக்க தேவையில்லை. முகமறியாத ஒருத்தரின் விமர்சனம் குறித்து சிந்திக்க தேவையில்லை. சமூகவலைதள விமர்சனங்கள் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் பாதிப்பதில்லை. என்னை மேற்கொண்டு நல்லது செய்யத்தான் அது தூண்டுகிறது.

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நான் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவல்ல. அந்தக் கோரிக்கை கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடிய சினிமா பிரபலங்கள்… ரசிகர்களுக்கு வாழ்த்து!

சென்னை: கோடம்பாக்கம் புலியூர்புரம் பகுதியில் நடிகர் விஷாலின் ரசிகர் மன்றமான மக்கள் நல இயக்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையடுத்து நடிகர் விஷால் பெண்களுக்கு சேலைகளை வழங்கியதோடு அப்பகுதியில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், அப்பகுதி மக்கள் நடிகர் விஷாலுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகள். வழக்கமாக வீட்டில்தான் பொங்கல் கொண்டாடுவேன். தற்போது இப்பகுதியில் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள தாய்கள் என்னை செயற்கைத்தனம் இல்லாமல் மனதார வாழ்த்தினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த இடத்தை அரசியலுக்காக நான் பயன்படுத்தவில்லை. இருந்த போதிலும், இப்பகுதி மக்கள் ஒருவாரமாக தண்ணீர் வரவில்லை எனக் கூறுகின்றனர். அதனால் என்னால் முடிந்த அளவிற்கு தற்போது ஒரு மணி நேரத்தில் தண்ணீர் அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். அது எனது கடமையாக நினைக்கிறேன்.

கோயிலுக்கு வந்தேன், சென்றேன் என இருக்க கூடாது. இப்பகுதியில் உள்ள 100 வருட கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதையும் செய்ய வேண்டும். அனைவரும் முடிந்த அளவிற்கு சமுதாயத்திற்கு உதவ வேண்டும். இங்கு ஒருவர் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாக கேள்விப்பட்டேன். தமிழ்நாடு சார்பாக 100 பேராவது ஒலிம்பிக் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல எங்களின் விருப்பம்.

மறைந்த விஜயகாந்துக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்த உள்ளோம். அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அனைவரும் கண்டிப்பாக வருவார்கள். விஜயகாந்த் நடிகர் சங்கத்துக்காக என்ன செய்துள்ளார் என அனைவருக்கும் தெரியும். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது பொதுப் பணி. நாம் எது செய்தாலும் அது அரசியல்தான். இந்த இடத்தில் இன்று அரசியல் செய்வதாக நினைத்தால் கூட தப்பில்லை.

இந்த காலக்கட்டத்தில் நல்லது செய்வது கடினம். கேட்டது செய்வது சுலபம். அதுகுறித்து சிந்திக்க தேவையில்லை. முகமறியாத ஒருத்தரின் விமர்சனம் குறித்து சிந்திக்க தேவையில்லை. சமூகவலைதள விமர்சனங்கள் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் பாதிப்பதில்லை. என்னை மேற்கொண்டு நல்லது செய்யத்தான் அது தூண்டுகிறது.

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நான் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவல்ல. அந்தக் கோரிக்கை கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடிய சினிமா பிரபலங்கள்… ரசிகர்களுக்கு வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.