ETV Bharat / state

‘பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்’ - முத்தரசன்

author img

By

Published : Apr 25, 2019, 9:27 PM IST

சென்னை: பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க முடியாத சூழல் நிலவியதால், அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் -முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அக்கட்சியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுப்பராயன், நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்துள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகாயுள்ளது என்றார்.

மேலும், ‘பொன்பரப்பியில் கணிசமான தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் உள்ள இடத்தில் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இதில் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அக்கட்சியன் திருப்பூர் மக்களவை தொகுதி வேட்பாளர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோருடன் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், " தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளிலும் மதச்சார்பற் முற்போக்கு கூடேடணியின் வெற்றி உறுதியாகாயுள்ளது.

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வின் வெற்றி உறுதியாகியுள்ளது. நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்றும். அதற்கான பிரச்சாரத்தை மே தினத்தில் தொடங்க உள்ளேன்.

பொன்பரப்பியில் கணிசமான தலித் வாக்காளர்கள் உள்ள இடத்தில் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். குளறுபடிகளை தாண்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.

மோடி எவ்வளவு நேரம் தூங்கினார் எவ்வளவு நேரம் விழித்திருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் தூங்கியோ அல்லது விழித்திருந்தோ நாட்டை கெடுத்துள்ளார்.

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிகாரி நுழைந்தது பற்றிய விசாரணையை தேர்தல் ஆணையம் முறையாக நடத்தும் என நம்புகிறேன்.

மூன்றாம் அணி அமைவதை பற்றி தேசிய தலைவர்கள் முடிவெடுப்பார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பின் உங்களுக்கு தகவல் வரும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.