ETV Bharat / state

குட்கா விற்பனை - சென்னையில் 7 நாட்களில் 146 கைது

author img

By

Published : Jul 10, 2022, 7:05 PM IST

சென்னையில் கடந்த ஏழு நாட்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் தனிப்படை போலீசார் கடந்த 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்து 146 நபர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 280 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகள், 1.3 கிலோ எடை கொண்ட மாவா பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் போதை பொருள் கடத்தி வந்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 200 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை - 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.