ETV Bharat / state

'நான்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு'

author img

By

Published : Aug 6, 2021, 12:44 PM IST

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்
வானிலை மையம்

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆக.06) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, காரைக்கால், புதுக்கோட்டை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை (ஆக.07), நாளை மறுநாள் (ஆக.08) ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் புதுக்கோட்டை, புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 மாவட்டங்களுக்கு மழை: மக்களே உஷார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.