ETV Bharat / state

முதன்முறையாக மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், 36 வயது பெண்ணிற்கு பொருத்தப்பட்டு சாதனை!

author img

By

Published : Mar 18, 2021, 12:03 PM IST

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதன்முறையாக மதுரையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் இதயம், 36 வயது பெண்ணிற்குப் பொருத்தப்பட்டு, அவரது உயிரை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செய்திகள்
முதன் முறையாக மூளை சாவு அடைந்த இளைஞரின் இருதயம், 36 வயது பெண்ணிற்கு பொருதபட்டு சாதனை

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுஜாதா(36) என்ற பெண் இதயக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நிலை மிக மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த நிலையில் மதுரையில், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தமிழ்மணி(21) என்பவரின் இதயத்தை தானம் செய்வதற்கு, உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மதுரை விமான நிலையத்திலுருந்து 50 நிமிடத்தில், தமிழ்மணியின் இதயம் சென்னை குரோம்பேட்டை கொண்டுவரப்பட்டது. பின் ரேலா மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை இயக்குநர் சந்தீப் அத்தாவர் தலைமையிலான மருத்துவர்கள், கடந்த 27ஆம் தேதி வெற்றிகரமாக அப்பெண்ணிற்குப் பொருத்தப்பட்டது.

பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் சுஜாதா பேசியபோது, 'தனக்கு மறுவாழ்வு அளித்த இளைஞரின் குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும்; சிகிச்சையினை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்' கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய மொஹமத் ரேலா, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை, சரியான நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர உதவிய அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

36 வயது பெண்ணிற்கு இதய மாற்று சிகிச்சை

இதையும் படிங்க: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாற்றுத்திறனாளி பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.