ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Jun 11, 2021, 9:12 PM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ..

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் லாக்டவுன் ஜூன் 21 வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்குமென முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

’ட்விட்டர் போலி கணக்கு குறித்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட போலீஸ்’ - நடிகர் சார்லி புகழராம்

சென்னை: சமூகவலைதளத்தில் தனது பெயரை வைத்து போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் சார்லி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றிற்கு அனுமதி, எவற்றிற்கு அனுமதி இல்லை!

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எவற்றிற்கு அனுமதி, அனுமதியில்லை என்பதை கீழே காண்போம்.

Gionee Stylfit GSW Smartwatch அம்சங்களுக்கு குறைவில்லை... ஜியோனியின் அசத்தலான ஸ்மார்ட் வாட்சுகள்!

சீன நிறுவனமான ஜியோனி, ஸ்டைல்பிட் ஜி.எஸ்.டபிள்யூ 6, ஸ்டைல்ஃபிட் ஜி.எஸ்.டபிள்யூ 7, ஸ்டைல்பிட் ஜி.எஸ்.டபிள்யூ 8 ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட் வாட்சுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொடூர துரோகத்தை மனைவிக்கு செய்த கணவன் - நண்பர்கள் உள்பட மூவர் கைது!

பண்ருட்டியில் பணத்திற்காக மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து, தன் நண்பர்களைக் கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்திய கணவர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்கள் விபரத்தை சரிபார்க்க தேர்வுத்துறை உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டத்தில், 10,11 ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்களின் விபரங்களை, வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து தெரிவிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வின் பாதிப்பை ஆராய குழு: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கான குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ராஜன் நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

74ஆவது பிறந்தநாளை மகள் வீட்டில் கொண்டாடிய லாலு பிரசாத் யாதவ்

பிகாரின் முதுபெரும் அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது 74ஆவது பிறந்தநாளை தன் மகள் வீட்டில் கொண்டாடினார்.

’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் துறை தொடங்க திட்ட வரைவு அனுப்பப்படவில்லை’

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் துறை தொடங்க திட்ட வரைவு எதுவும் அனுப்பப்படவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு விளக்கமளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.