ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Jun 5, 2021, 9:16 PM IST

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

தமிழ்நாட்டில் கோவிட்டுக்கு 32 மருத்துவர்கள் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கோவிட் இரண்டாம் அலையில் 32 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தேர்தலில் கறுப்பு பணம்- நடிகர் சுரேஷ் கோபிக்கு சிக்கல்!

தேர்தலில் கறுப்பு பணம் உபயோகப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஐ பட வில்லனும் பாஜக நட்சத்திர வேட்பாளருமான நடிகர் சுரேஷ் கோபிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை: ராஜகோபாலன் ஜாமீன் மனு ரத்து!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்

வரும் செப்டம்பர் மாதத்தில் கோவிட் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடு தற்போதே மேற்கொள்ள வேண்டும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

பசுமை வழியில் 'இந்திய கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்'

பசுமை வழியில் இந்தியக் கடற்படையின் இயக்க முறைகள் என்ற நோக்கத்திற்கு இணையாக ஓர் விரிவான ‘இந்திய கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை' கடற்படை செயல்படுத்தவுள்ளது.

மீண்டும் ஒரு லட்சம் கோடியை தாண்டிய மே மாத ஜி.எஸ்.டி. வசூல்

ஜி.எஸ்.டி வசூல் தொடர்ந்து எட்டாவது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு: டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கக் கோரும் மக்கள் கண்காணிப்பகம்

தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்க சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கு: ஈரோட்டில் 15.000 வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு: ஊரடங்கை மீறி சாலையில் சுற்றி திரிந்தவர்களின் 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 52 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கனமழை: ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.