ETV Bharat / state

நாளையுடன் மின் கட்டண கால அவகாசம் முடிவு!

author img

By

Published : Jun 14, 2021, 4:03 PM IST

தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (ஜூன்.17) முடிவடைகிறது.

electricity bill deadline
மின்கட்டணம் கால அவகாசம்

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசிநாள் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதியாக இருந்தால், அதனை ஜூன் 15ஆம் தேதிவரை செலுத்தலாம் என கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதேசமயம் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் நாளையுடன் (ஜூன்.15) முடிவடைகிறது.

கூடுதல் தளர்வுகள் அளித்த சில நாட்களிலேயே மின் கட்டணம் உடனே செலுத்துவது என்பது மிகவும் கடினம். எனவே கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சாராய பாட்டில்தான் எஞ்சாமி' - சூடமேற்றி எஞ்சாயி செய்த திமுக தொண்டர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.