ETV Bharat / state

கேப்டனின் நல்லடக்கத்தை காணவிடுங்கள்..! - தேமுதிக தொண்டர்கள் சாலைமறியல்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 2:28 PM IST

Vijayakanth funeral: மறைந்த விஜயகாந்தை நல்லடக்கம் செய்யும் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மொத்தம் 200 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்ததால், தொண்டர்களும், பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Vijayakanth funeral fans protest
தேமுதிக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம்

சென்னை: நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். சென்னை சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனிடையே நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய அண்டோனி, விஜய் சேதுபதி, அர்ஜூன் ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

இதனை அடுத்து இன்று (டிச.29) காலை சுமார் 6:00 மணியளவில் விஜயகாந்தின் உடல், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன், சென்னை உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவித்திடலில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. இதையடுத்து இங்கு ரஜினிகாந்த், பார்த்திபன், ராதாரவி, பாக்கியராஜ், உள்ளிட்ட பல நடிகர்கள் அஞ்சலில் செலுத்தினார்கள்.

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்து, மாலை 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக அலுவலகம் சென்றடையும். அதன் பின்னர் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளதாக தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் உடலை நல்லடக்கம் செய்ய, தேமுதிக அலுவலகத்தில் ஜேசிபி வாகனம் மூலம் பள்ளம் தோண்டுவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனால், கட்சி அலுவலகத்திற்கு வெளியே சாலையில் நீண்ட தூரம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டு உள்ளனர். இதனை அடுத்து அலுவலகத்திற்கு முன்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நல்லடக்கம் செய்யும் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மொத்தம் 200 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், தொண்டர்களும், பொதுமக்களும் சென்னை கோயம்பேடு சாலையில், சாலை மறியல் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... அஞ்சலி செலுத்த கண்ணீருடன் குவியும் பொதுமக்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.