ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 503 பேருக்கு கரோனா!

author img

By

Published : Jan 28, 2021, 7:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 503 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

503 பேருக்கு கரோனா  தமிழ்நாட்டில் மேலும் 503 பேருக்கு கரோனா  தமிழ்நாடு கரோனா செய்திகள்  மக்கள் நல்வாழ்வு துறை  Department of Public Welfare  Corona for 503 people  Corona Confirmed 503 people in Tamil Nadu  Tamil Nadu Corona News  Tamil Nadu Corona Updates
Corona Confirmed 503 people in Tamil Nadu

மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில், புதிதாக 52 ஆயிரத்து 276 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 503 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில், இதுவரை ஒரு கோடியே 55 லட்சத்து 49 ஆயிரத்து 828 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 லட்சத்து 36 ஆயிரத்து 818 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், பூரண குணமடைந்த 544 பேர் இன்று (ஜன.28) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும், தனியார் மருத்துவ மனையில் 3 நோயாளிகளும் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2 லட்சத்து 30 ஆயிரத்து 834 பேர்

கோயம்புத்தூர்- 54 ஆயிரத்து 225 பேர்

செங்கல்பட்டு - 51 ஆயிரத்து 409 பேர்

திருவள்ளூர் - 43 ஆயிரத்து 486 பேர்

சேலம்- 32 ஆயிரத்து 363 பேர்

காஞ்சிபுரம் - 29 ஆயிரத்து 221 பேர்

கடலூர் - 24 ஆயிரத்து 910 பேர்

மதுரை - 20 ஆயிரத்து 966 பேர்

வேலூர்- 20 ஆயிரத்து 694 பேர்

திருவண்ணாமலை- 19 ஆயிரத்து 346 பேர்

தேனி- 17 ஆயிரத்து 67 பேர்

தஞ்சாவூர் - 17 ஆயிரத்து 642 பேர்

திருப்பூர்- 17 ஆயிரத்து 829 பேர்

விருதுநகர்- 16 ஆயிரத்து 549 பேர்

கன்னியாகுமரி - 16 ஆயிரத்து 791 பேர்

தூத்துக்குடி - 16 ஆயிரத்து 270 பேர்

ராணிப்பேட்டை - 16 ஆயிரத்து 107 பேர்

திருநெல்வேலி - 15 ஆயிரத்து 553 பேர்

விழுப்புரம்- 15 ஆயிரத்து 175 பேர்

திருச்சிராப்பள்ளி- 14 ஆயிரத்து 646 பேர்

ஈரோடு- 14 ஆயிரத்து 305 பேர்

புதுக்கோட்டை - 11 ஆயிரத்து 542 பேர்

கள்ளக்குறிச்சி- 10 ஆயிரத்து 866 பேர்

திருவாரூர்- 11 ஆயிரத்து 177 பேர்

நாமக்கல் - 11 ஆயிரத்து 595 பேர்

திண்டுக்கல் - 11 ஆயிரத்து 231 பேர்

தென்காசி - எட்டாயிரத்து 413 பேர்

நாகப்பட்டினம் - எட்டாயிரத்து 429 பேர்

நீலகிரி - எட்டாயிரத்து 187 பேர்

கிருஷ்ணகிரி - எட்டாயிரத்து 55 பேர்

திருப்பத்தூர் - ஏழாயிரத்து 565 பேர்

சிவகங்கை - ஆறாயிரத்து 651 பேர்

ராமநாதபுரம்- ஆறாயிரத்து 411 பேர்

தருமபுரி - ஆறாயிரத்து 577 பேர்

கரூர் - ஐந்தாயிரத்து 383 பேர்

அரியலூர் - நான்காயிரத்து 681 பேர்

பெரம்பலூர் - இரண்டாயிரத்து 263 பேர்

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940 பேர் உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1036 பேர் ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.