ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 514 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Feb 3, 2021, 9:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 514 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 514 பேருக்கு கரோனா பாதிப்பு  தமிழ்நாடு கரோனா செய்திகள்  தமிழ்நாடு கரோனா நிலவரம்  Tamilnadu Corona Updates  Corona Updates  Corona affects 514 people in Tamil Nadu
Tamilnadu Corona Updates

மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "காஞ்சிபுரத்தில் தனியார் பரிசோதனை மையம் ஒன்றுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 53 ஆயிரத்து 471 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் இருந்த 512 பேருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு பேருக்கும் என 514 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு கோடியே 58 லட்சத்து 65 ஆயிரத்து 23 பேருக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், 8 லட்சத்து 39 ஆயிரத்து 866 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 494 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 533 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தவரின் எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து ஒன்று ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 2 பேரும், அரசு மருத்துவமனையில் 2 பேரும் என மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2 லட்சத்து 31 ஆயிரத்து 711 பேர்

கோயம்புத்தூர் - 54 ஆயிரத்து 575 பேர்

செங்கல்பட்டு - 51 ஆயிரத்து 641 பேர்

திருவள்ளூர் - 43 ஆயிரத்து 626 பேர்

சேலம் - 32 ஆயிரத்து 457 பேர்

காஞ்சிபுரம் - 29 ஆயிரத்து 288 பேர்

கடலூர் - 24 ஆயிரத்து 948 பேர்

மதுரை - 21 ஆயிரத்து 33 பேர்

வேலூர் - 20 ஆயிரத்து 769 பேர்

திருவண்ணாமலை - 19 ஆயிரத்து 369 பேர்

தேனி - 17 ஆயிரத்து 86 பேர்

தஞ்சாவூர் - 17 ஆயிரத்து 747 பேர்

திருப்பூர் - 17 ஆயிரத்து 965 பேர்

விருதுநகர் - 16 ஆயிரத்து 575 பேர்

கன்னியாகுமரி - 16 ஆயிரத்து 862 பேர்

தூத்துக்குடி - 16 ஆயிரத்து 283 பேர்

ராணிப்பேட்டை - 16 ஆயிரத்து 134 பேர்

திருநெல்வேலி - 15 ஆயிரத்து 600 பேர்

விழுப்புரம் - 15 ஆயிரத்து 197 பேர்

திருச்சி - 14 ஆயிரத்து 708 பேர்

ஈரோடு - 14 ஆயிரத்து 428 பேர்

புதுக்கோட்டை - 11 ஆயிரத்து 576 பேர்

கள்ளக்குறிச்சி - 10 ஆயிரத்து 878 பேர்

திருவாரூர் - 11 ஆயிரத்து 210 பேர்

நாமக்கல் - 11 ஆயிரத்து 664 பேர்

திண்டுக்கல் - 11 ஆயிரத்து 277 பேர்

தென்காசி - எட்டாயிரத்து 435 பேர்

நாகப்பட்டினம் - எட்டாயிரத்து 465 பேர்

நீலகிரி - எட்டாயிரத்து 223 பேர்

கிருஷ்ணகிரி - எட்டாயிரத்து 84 பேர்

திருப்பத்தூர் - ஏழாயிரத்து 584 பேர்

சிவகங்கை - ஆறாயிரத்து 672 பேர்

ராமநாதபுரம் - ஆறாயிரத்து 417 பேர்

தருமபுரி - ஆறாயிரத்து 594 பேர்

கரூர் - ஐந்தாயிரத்து 413 பேர்

அரியலூர் - நான்காயிரத்து 697 பேர்

பெரம்பலூர் - இரண்டாயிரத்து 269 பேர்

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940 பேர், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1038 பேர், ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவன் உள்பட 4 ஆசிரியர்களுக்கு கரோனா: பெற்றோர்கள் அதிர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.