ETV Bharat / state

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை படையினர்: மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 9:38 PM IST

தமிழக மீனவர்கள் கைது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம்
தமிழக மீனவர்கள் கைது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Fishermen arrested: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவரது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்த விவகாரத்தை இலங்கை அரசுக்கு வலுவாக எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.17) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறைபிடித்தனர். மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை களைக்கட்டிய வேடந்தாங்கல்.. முப்பதாயிரம் பறவைகளைப் பார்க்கக் குவிந்த பார்வையாளர்கள்!

கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர். இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமுதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளைத் தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும். இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்கத் தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.