ETV Bharat / state

மிரள வைத்த மிக்ஜாம் புயல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 1:38 PM IST

M.K.Stalin inspected rain affected areas in Chennai: மிக்ஜாம் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

Stalin inspected rain affected areas in Chennai
மிக்ஜாம் புயல் பாதிப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மிக்ஜாம் புயல் உருவாகி கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டகளை கனமழையால் புரட்டிப் போட்டது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி, மழை நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.

வீடுகளில் தண்ணீர் புகுந்த காரணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.

  • அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.… pic.twitter.com/D2KPsOibjP

    — M.K.Stalin (@mkstalin) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன் பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், சென்னை சென்ட்ரல் மற்றும் பெரியமேடு பகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உணவு வழங்கினார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி, இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த ஆய்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கர்நாடக கிடங்கு விபத்து: 6 பேர் பலி... விபத்தி சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தகவல்!

சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மிக்ஜாம் புயல் உருவாகி கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டகளை கனமழையால் புரட்டிப் போட்டது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி, மழை நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.

வீடுகளில் தண்ணீர் புகுந்த காரணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.

  • அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.… pic.twitter.com/D2KPsOibjP

    — M.K.Stalin (@mkstalin) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன் பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், சென்னை சென்ட்ரல் மற்றும் பெரியமேடு பகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உணவு வழங்கினார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி, இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த ஆய்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கர்நாடக கிடங்கு விபத்து: 6 பேர் பலி... விபத்தி சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.