ETV Bharat / state

chennai rains: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை - வெள்ளத்தில் மிதந்த வாகனங்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 1:33 PM IST

சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கன மழையால் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னையில் வெளுத்து வாங்கிய கன மழை
சென்னையில் வெளுத்து வாங்கிய கன மழை

சென்னையில் வெளுத்து வாங்கிய கன மழை

சென்னை: புறநகர் பகுதிகளில் சில நாட்களாக காலை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை வேலைகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம்,குரோம்பேட்டை , பம்மல், மீனம்பாக்கம், சேலையூர் , வண்டலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி,மின்னல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து தாம்பரம் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது இதனால் கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்க்கு தாம்பரம் செல்லும் வாகன ஓட்டிகள் இரண்டு கிலோ மீட்டர் வரை சுற்றி செல்கின்றனர்.

மேலும் கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் குளம் தேங்கி நிற்பதால் பேருந்துகள் வெகு தூரம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக கருத்தில் கொண்டு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: இறுதிக் கட்டத்தை எட்டிய மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு பணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.