ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

author img

By

Published : Apr 26, 2023, 1:26 PM IST

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai
கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஏப்.26) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல், வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30ஆம் தேதி அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 7 சென்டி மீட்டரும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவை மாவட்டம் வால்பாறை, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில், தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர், கடலூர் மாவட்டம் வடக்குத்து, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, கோவை மாவட்டம் சோலையார் பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: HSC Result Date: +2 தேர்வு முடிவு வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.