ETV Bharat / state

சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை முதலமைச்சருடன் சந்திப்பு

author img

By

Published : Dec 8, 2021, 12:44 PM IST

ஐ ஐ டி மாணவி பாத்திமா மரணத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை முதலமைச்சருடன் சந்திப்பு
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது மகள் உயிரிழந்து சுமார் இரு வருடங்கள் ஆகிவிட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலினை சந்தித்து முறையிட்டேன். தற்போது முதல்வராக உள்ள அவரை சந்தித்து விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்" என்றார்.

அவரது வழக்கறிஞர் முகமது ஷா, "2019 டிசம்பரில் சிபிஐ விசாரணை துவங்கிய நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தாமதத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. பாத்திமாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம் என அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, "கோட்டூர்புரம் காவல் நிலையம் விசாரித்து வந்த இந்த வழக்கு, மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட பிறகும் ஆமை வேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் லத்தீப்பை விசாரித்துள்ளனர் , விசாரணை மர்மமான முறையில் உள்ளது. விசாரணை நேர்மையான முறையில் செல்ல வேண்டும் என முதல்மைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.


இதையும் படிங்க :கரூரில் கல் குவாரி உரிமையாளர் கடத்திக்கொலை: குற்றவாளிகளை நெருங்கும் காவல் துறை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.