ETV Bharat / state

ஐஐடி மாணவி தற்கொலை - 3 பேராசிரியர்களை சுற்றி வளைக்கும் காவல் துறை!

author img

By

Published : Nov 13, 2019, 9:03 PM IST

Updated : Nov 13, 2019, 11:43 PM IST

சென்னை: ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாணவியின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படும் பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Fatima latheef

சென்னை ஐ.ஐ.டியில் முதுகலை மனிதநேயம் பாடப்பிரிவில் படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் சனிக்கிழமை (நவ.08) இரவு தனது விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்ட கோட்டூர்புரம் காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என மாணவியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்

chennai
ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப்

தற்கொலை தொடர்பாக எவ்வித கடிதங்களும், ஆதாரங்களும் கிட்டாத நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப், தனது மகளின் செல்ஃபோனில் பதியப்பட்ட சில கருத்துகளை காவல்துறையிடம் தெரிவித்தார்.

அதனடிப்படையில், 'உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான், இறப்பிற்குக் காரணம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹேமச்சந்திரன் காரா, மிலின் பிராஃமே என்னும் இரண்டு பேராசிரியர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக கருதப்படும் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா, மிலின் பிராஃமே ஆகிய மூன்று பேர் மீதும் கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

chennai
காவல்துறையின் வழக்குப்பதிவு

தற்போது, மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனோடு துன்புறுத்தல் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் ஃபாத்திமா லத்தீஃப்புடன் பயின்ற மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai
சென்னை காவல்துறையின் வழக்குப்பதிவு

2018ஆம் ஆண்டு முதல் தற்போது மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை சம்பவம் வரை, சென்னை ஐஐடியில் ஐந்து தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - 11 பேராசிரியர்களிடம் விசாரணை

Intro:Body:*சென்னை - ஐ.ஐ.டி மாணவி தற்கொலை விவகாரம் - 3 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டம்*

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் (18). இவர் சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை மனிதநேயம் பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடிக்கும் ஃபாத்திமா, கடந்த மாதம் நடைபெற்ற இண்டர்னல் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பென் பெற்றதாகவும் இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தனது விடுதி அறையில் ஃபாத்திமா லத்திஃப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர்புரம் போலீசார் ஃபாத்திமாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவியின் பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து வரவழைத்த போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் மாணவி ஃபாத்திமாவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த கோட்டூர்புரம் போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என மாணவியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

தற்கொலை தொடர்பாக எவ்வித கடிதங்களும் ஆதாரங்களும் கிடைக்காமல் இருந்த நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது மகளின் இறப்பிற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் மாணவியின் செல்போனில் பதியப்பட்ட சில கருத்துகளை சுட்டிக்காட்டிய அவர், பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களான 3 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி சுதர்சன் பத்மநாபன் என்னும் உதவி பேராசிரியர்தான் தனது இறப்பிற்கு காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹேமச்சந்திரன் காரா, மில்லி பிராஃமே என்னும் இரண்டு பேராசிரியர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக காவல்துறையினர் விசாரிக்கும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்கள் மகளின் தற்கொலைக்கு நீதியை பெற்றுத் தரவேண்டும் என வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநரை சந்தித்து நாளை முறையாக புகார் அளிக்கவுள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா மற்றும் மில்லி பிராஃமே ஆகிய 3 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் துன்புறுத்தல் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டாரா என்ற அடிப்படையில் ஃபாத்திமா லத்தீஃப் உடன் பயிலும் மாணவ மாணவிகளிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு முதல் தற்போது மாணவி ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை சம்பவத்தையும் சேர்த்து இதுவரை சென்னை ஐ.ஐ.டி யில் 5 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.Conclusion:
Last Updated : Nov 13, 2019, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.