சென்னை: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று 73ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைவருக்கும் முன்மாதிரியாக, சிறப்பாகப் பணியாற்றிய 54 அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள நகர ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி மாலை அறிவிப்பு