ETV Bharat / state

சிசிடிவியில் சிக்கிய செல்போன் திருடர்கள் - காவல்துறையினர் விசாரணை!

author img

By

Published : Nov 8, 2019, 10:43 PM IST

சென்னை: செல்போன் கடையில் திருடிய திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.

chennai

சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்கான்(37). இவர் பர்மா பஜாரில் பழைய செல்ஃபோன் விற்பனை, செல்ஃபோன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலையில் மீண்டும் வந்து கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், கடையின் உள்ளே சென்று பாத்தபோது 20செல்ஃபோன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவியில் சிக்கிய செல்போன் திருடர்கள்

புகாரின் பேரில் காவல்துறையினர் திருட்டு நடைபெற்ற கடைக்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடித்து நூதன திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்!

Intro:Body:பழைய செல்போன் கடையில் 20 செல்போன்கள் திருட்டு..சிசிடிவி காட்சிகளை வைத்து போலிசார் விசாரணை..


சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் கான் (37).இவர் பர்மா பஜாரில் பழைய செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வந்துள்ளார்.இவர் வழக்கம் போல் நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வந்து கடையை திறக்க வரும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் கடையின் உள்ளே சென்று பார்க்கும் போது 20செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து கிழக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலிசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.