ETV Bharat / state

சென்னையில் 4.5 கிலோ தங்கம், 17 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்!

author img

By

Published : Mar 19, 2019, 9:14 AM IST

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி ஆலப்புழா விரைவு ரயிலில் கேரள மாநிலம் திருச்சூருக்குக் கடத்த முயன்ற நான்கரை கிலோ தங்க பிஸ்கட்டுகள் சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நான்கு பேரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர்களது இடுப்பில் தங்க பிஸ்கட்டுகள் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

தங்கம் கடத்தல்

அதில் ஒருவரிடம் மட்டும் முறையான ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லிஜோ, சனில், புதுகோடு பகுதியைச் சேர்ந்த பிரகாசன், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சத்யபாலன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் ஒரு நகைக்கடையில் தங்க பிஸ்கட்டுகளை வாங்கிக்கொண்டு கேரளா கொண்டுசென்று அதனை நகைகளாய் மாற்றி விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்றதாக அவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ரயில்வே காவல் துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தங்கம் கடத்தல்

அதேபோல், சென்னை வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் 17 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்களுக்கான எந்த ஆவணங்களும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் 17 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல் .
4 பேரை பிடித்து போலீசார் விசாரணை 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலேப்பி வரை செல்லும் ஆலேப்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்கம் கடத்தி செல்வதாக ரயில்வே போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது..

இதன் அடிப்படையில் சோதனை செய்த போலிசார் 4நபரை சந்தேகத்தின் பேரில் போலிசார் விசாரணை செய்தனர்.பின்னர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களின் பையை சோதனை செய்ததில் 4 அரை கிலோ தங்க நகைகள் எந்த வித ஆவணங்கள் இல்லாமல் வைத்திருப்பது தெரிய வந்தது..

பின்னர் அவர்களை போலிசார் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் லியோ,சனில்,சத்யபலன்,பிரகாசன் எனவும் இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.