ETV Bharat / state

டான்செட் தேர்வு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : May 8, 2019, 2:09 PM IST

சென்னை: எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு செயலர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல் கையேட்டில்,


'டான்செட் நுழைவுத் தேர்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.

இந்தத் தேர்வினை எழுதுவதற்கு இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 250 ரூபாயும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்பிற்கு ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.

மாணவர்கள், டான்செட் தேர்வுக்கு பதிவு செய்தல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கான மையங்களை மாணவர்கள் தேர்வு செய்த பின்னர் எந்தக் காரணம் கூறினாலும் மாற்ற முடியாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

 
டான்செட் தேர்விற்கு மையம் ஒதுக்கினால்
எந்த காரணத்திற்காகவும் மாற்ற முடியாது

சென்னை, 
முதுகலை தொழில் படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்விற்கான மையத்தினை ஒதுக்கீனால் மீண்டும் எந்த காரணத்தை கொண்டும் மாற்ற முடியாது என தமிழ்நாடு பொது  நுழைவுத் தேர்வு செயலாளர்  தெரிவித்துள்ளார். 

 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்2019)  சென்னை அண்ணாப் பல்கலைக் கழகம் நடத்தும்  என அரசு அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வு மூலம் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2019-20ம் கல்வியாண்டில் சேரலாம். மேலும் சில பல்கலைக் கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கின்றனர். 

எம்.பி.ஏ, எம்.சிஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர்500 ரூபாயும், எஸ்.சி,எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர்250 ரூபாயும் ஆன்லைன் மூலம்  செலுத்த வேண்டும்.
இந்த தேர்வினை எழுதுவதற்கு மே 8  ந் தேதி முதல் 25 ந் தேதி வரை ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.
 எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு ஜூன் 22 ந் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு ஜூன் 23 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும். 

 மாணவர்கள் சேர்வதற்கான தகுதி, பதிவு செய்தல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை  www.annauniv.edu/tancet2019  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் .
மேலும் தமிழகத்தில் சென்னை,கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு மையங்களை மாணவர்கள் தேர்வு செய்த பின்னர் எந்தக் காரணம் கூறினாலும் மாற்ற முடியாது என தகவல் கையேட்டில் கூறியுள்ளார். 


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.