ETV Bharat / state

அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் - அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 3:43 PM IST

Anbil Mahesh Poyyamozhli: அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம்படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், இடப்பெயர்வுச் சான்றிதழ், பிற மாநிலங்களில் உயர்கல்வி பயில, இணைய வழி விண்ணப்பங்களாக பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

Anbil Mahesh Poyyamozhli
அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெறவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

சென்னை: தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி சான்றிதழ்களை வழங்கி வருகிறது. தற்பொழுது சான்றிதழ்களின் நகல் வேண்டும் என்றால், அதற்கு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். இதனால் அவர்களுக்கான சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சான்றிழ்கள் கிடைக்காமல் இருப்பதால் நேரடியாக தேர்வுத் துறைக்கு வருகின்றனர்.

மாணவர்கள், பொதுமக்கள் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யாமல், பிழையுடன் பூர்த்தி செய்து விண்ணப்பித்து விடுவதால் அவர்களது விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல் திரும்ப அனுப்பப்படும் நிலையும் உள்ளது.

  • சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று எனது தலைமையில் @tnschoolsedu கீழ் இயங்கும் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மேம்பாடு, அதன்… pic.twitter.com/rchjundkvC

    — Anbil Mahesh (@Anbil_Mahesh) December 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் சான்றிதழ்களின் இரண்டாம் படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், பிற மாநிலங்களில் உயர்கல்வி படிப்பதற்கான இடம் பெயர்வு சான்றிதழ் போன்றவற்றிக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் வசதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி இன்று (டிச.20) துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் கூறியதாவது, “பொதுமக்கள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (Certified Copy of Mark Certificate), இடப்பெயர்வுச் சான்றிதழ் (பிற மாநிலங்களில் உயர்கல்வி பயில) (Migration Certificate For pursuing Higher Education in) இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு E-Certificateஆக அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை விண்ணப்பத்தாரர்கள் அறியும் வசதியும், விண்ணப்ப எண்ணைக் கொண்டு விண்ணப்ப நிலை குறித்த விவரங்கள், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விண்ணப்பத்தில் அடிப்படை விவரங்கள் சமர்ப்பிக்கவில்லை மற்றும் பூர்த்தி செய்யாமல் விடப்பட்டுள்ளது போன்ற காரணங்களுக்காக விண்ணப்பத்தை நிராகரிக்கும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும். மாணவர்கள், மக்களுக்கு சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதுடன், வீண் காலவிரயமும் தவிர்க்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலத்தில் 2 திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிநீக்கம்..! ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.