ETV Bharat / state

மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி தொடங்க பரிசீலனை... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...

author img

By

Published : Apr 8, 2022, 4:46 PM IST

மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (ஏப்.8) மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி தொடங்க அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி தொடங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது" என்று பதிலளித்தார்.

இதற்கு முன்னதாக டி.ஆர்.பி. ராஜா "மன்னார்குடியில் விவசாய மக்கள் அதிகம் வாழுந்துவருகின்றனர். இங்கு வேளாண்மை கல்லூரிக்கு முக்கியத்துவம் உள்ளது. இதனால் விவசாய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். இந்த பகுதியில் வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டால், இளைஞர்கள் விவசாயத்திற்குள் வரவழக்கலாம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்திற்கு விசிட் அடித்த மாணவ-மாணவிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.